Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் இவ்விழாவின் போது பல அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைத்து வழிபடுவது வழக்கம்.
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் இந்த சிலைகள் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
காகிதம் மற்றும் அட்டைக் கூழ், மாவு, தேங்காய் நார் கொண்டு சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் பாதிப்பில்லாத வகையில் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த நிலைகளுக்கு பூசப்படும் வர்ணங்களும் (வாட்டர் கலர்) எளிதில் நீரில் கரைந்து, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் உருவாகி வருகிறார் இந்த விநாயகர்.
இவர்களது கைவண்ணத்தில் பால விநாயகர், ராஜ கணபதி, மயில் விநாயகர், அன்னபட்சி விநாயகர், வெள்ளை விநாயகர் போன்ற விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 15 அடி வரை கண்களை பறிக்கும் வர்ணங்களில் ஜொலிக்கின்றன.
இந்த சிலைகள்100 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த நாங்கள், பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயர் சிலைகளை தயாரிப்பது மன நிறைவை அளிப்பதாக கூறுகிறார்கள் இந்த தொழிலாளர்கள்.
நாம் கொண்டாடும் பண்டிகைகள் புகலிடம் தேடி வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பான வாழ்வாதாரத்தை தமிழகமும் அளிக்கிறது என்பதை மறுக்க முடியாது.
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து தொழில் செய்தாலும், சுற்றுச் சூழலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் இது போன்ற விநாயகர் சிலைகள் செய்வது பாராட்டுக்குரியது.